Tuesday, March 24, 2009


மாணவி பிரியா

மனிதமனம் உணர்ச்சி வயப்படும் ஒற்றை நொடியில் ஆயிரமாயிரம் குற்றங்கள் நடந்தேறிவிடுகின்றன. அத்தகு குற்றச்சூழலில் அறிந்தோ, அறியாமலோ சிக்குண்டு சிறைக்கம்பிகளுக்கு பின்னால் வாழ்க்கையை நடத்த நேரிடுகிற சிறைவாசிகளின் (குற்றவாளிகள்) வாழ்க்கையிலிருந்து சமூகம் அறியவேண்டிய செய்திகளை நம்முன் பட்டியலிட்டுக் காண்பிக்கிறார் பார்வையற்ற M.Phil., மாணவி செல்வி. பிரியா.

மதுரையை சேர்ந்த இவர் தன்னுடைய பார்வை குறைப்பாட்டு சங்கடத்தையும் மீறி, தமிழக சிறைத்துறை வரலாற்றிலேயே முதன்முறையாக சிறப்பு அனுமதி பெற்று சிறைவாசிகளிடம் ஆய்வை மேற்கொண்டார். M.A., பட்டம் பயிலும்போது, 'மனித உரிமைகள்' பாடப்பிரிவின் கீழ் மதுரை மத்தியச் சிறையிலிருந்த ஆயுள் தண்டனை பெற்ற 80 கைதிகளிடம் சிறை வாழ்க்கை குறித்தும், மாற்றம் பெற்ற மனவுணர்வுகள் பற்றியும் ஆய்வை மேற்கொண்டார்.

அந்த ஆய்வு விளைவுகளின் அடிப்படையில் இளமுனைவர் (M.Phil)ஆய்வை பெண் கைதிகளின் வாழ்வியல் நிலை குறித்து அறிந்து கொள்ளும் முனைப்போடு மேற்கொண்டார். வேலூர் மத்திய சிறைச்சாலையிலிருந்த பெண் சிறைக்கைதிகளை தேர்வு செய்து அவர்களை நேரில் சந்தித்து கேள்விகள் கேட்டு பதில்கள் பெற்று அத‌னடிப்படையில் தன் ஆய்வுக்கட்டுரையை விருதுநகர் வன்னியப் பெருமாள் மகளிர் கல்லூரியில் சமர்ப்பித்துள்ளார்.

தனக்கான பார்வையின்மை குறையையும் மீறி, தன் கல்வியின் துணையோடு சமூகத்தில் கைதிகள் பற்றிய எண்ண மாறுபாட்டை உருவாக்கிட முனையும் மாணவி பிரியா பெற்றுள்ள சாதனையாளர் விருதும், கல்விச் சாதனையாள‌ர் விருதும் அவரின் எதிர்கால கல்வியார்வத்தை அடையாளம் காண்பிக்கின்றன.

2 comments:

  1. It is very nice site. You have done this for people of disables who are ready to achieve something different. keep it up.

    A.M.Jawahar
    Nagapattinam

    ReplyDelete
  2. THANNAMBIKKAI MANITHARGALUKU
    JAI HO
    JANA

    ReplyDelete