
முனைவர் ராதாபாய்
உடற்குறையுற்ற பெண்மணிகளுக்கு நல்ல மணவாழ்க்கை அமைவது சாத்தியமில்லை எனும் கூற்றைப் பொய்யாக்கியபடி, மகத்தான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார் புதுக்கோட்டை ராதாபாய். இவர் 'தமிழகத்தில் பார்வையற்றோரின் நிலையும், மறுவாழ்வும்' எனும் தலைப்பில் ஆய்வு செய்து, 1991 ஆம் ஆண்டில் முனைவர் பட்டத்தை பெற்றார். இதன்மூலம் 'தென்னிந்தியாவிலேயே முனைவர் பட்டம் பெற்ற முதல் பார்வையற்ற் பெண்மணி' இவர்தான் என்பது இவரின் முயற்சிக்கு கிடைத்த கூடுதல் சிறப்பு.
இளவயதிலேயே பார்வையை இழந்துவிட்டபோதிலும், புதுக்கோட்டை மாநகரத்தின் புகழ் மாமணிகளில் ஒருவராகத் திகழ்கிறார். புதுக்கோட்டை மகளிர் கலைக்கல்லூரியில், வரலாற்றுத்துறைத்தலைவராகப் பணியாற்றியபடி, பல்துறைச் சார்ந்த மேடைப்பேச்சுக்கலையிலும் வல்லவராக வலம்வரும் இவரின் கண்கண்ட துணையாகத் திகழ்கிறார் கணவர் திரு. லட்சுமி நாராயணன்.
தன்னம்பிக்கைப் பெண்மணி, கருத்தொளிச் செம்மல், நல்லாசிரியர், கவிநிலவு, சிறந்த பெண்மணி, சாதனைப் பெண்மணி, சமூகப்பணிக்கான அன்னை தெரசா விருது எனப்பல விருதுகளைப் பெற்று, சாதனைபுரிய உடற்குறை ஒரு தடையல்ல என உலகிற்கு உணர்த்தியபடி வாழ்ந்து வருகிறார்.

No comments:
Post a Comment