கவி.பெரியசாமி
இளம்வயதிலேயே போலியோவால் பாதிக்கப்பட்ட போதிலும், தன்னை ஒரு கவிஞனாக அடையாளப்படுத்திக் கொண்டு திருச்சி, சென்னை, காரைக்கால் போன்ற வானொலி நிலையங்களின் நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளது மட்டுமல்லாமல் 'காகித உதடுகள்' எனும் கவிதை நூலை வெளியிட்ட நூலாசிரியராகவும், தன்னம்பிக்கைத் தொடர் கட்டுரையாளராகவும், அறியப்பட்டுள்ள இவர் திரைப்பட பாடலாசிரியராக முத்திரை பதிக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ள பன்முகப் படைப்பாளி.
தான் நடத்திவரும் ஆத்ம பெருமாள் சமூகப்பணி தொண்டு நிறுவனத்தின் வாயிலாக பல்வேறு சமுதாயப்பணிகளையும் செயலாற்றி வருகிறார். விரைவில் 'பதினாறு வயதுக்காரி' என்ற கவிதை நூலையும் வெளியிட எண்ணியுள்ளார்.
No comments:
Post a Comment