Wednesday, December 30, 2009


கோவை ஞானி

கோவையில் தமிழாசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்ற இவரின் வயது எழுபத்து ஐந்தை கடந்தாலும், தொடர்ந்து தமிழ்ப்ப‌ணியாற்றி வருகிறார். இருபத்தைந்து நூல்களுக்கு மேல் வெளியிட்டுள்ள முதுபெரும் படைப்பாளியான இவர் கடந்த முப்பதாண்டுகளுக்கும் மேலாக நிகழ், பரிமாணம், தமிழ் நேயம் ஆகிய இதழ்க‌ளை வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்க சிறப்பம்சம்.

க‌ண்பார்வையிருந்த‌ போது இர‌ண்டு கவிதை நூல்க‌ளை ம‌ட்டுமே வெளியிட்டிருந்த‌ இவ‌ர், 'க‌விச்சித‌ற‌ல்' தொகுப்பின் அறிவிப்பைக் கண்டு நூலில் பங்கேற்றிருப்பது சிறப்பான செய்தி. மார்க்சிய‌ நோக்கில் த‌மிழில‌க்கிய‌ ஆய்வை செவ்வ‌னே மேற்கொண்டுள்ள‌ இவ‌ரின் இருப‌தாண்டுகால‌ பார்வையின்மைக் குறையை த‌ன் உத‌வியாளர் மற்றும் ந‌ண்ப‌ர்க‌ளின் துணையோடு அக‌ற்றி, த‌மிழ‌ன்னையை நோக்கி தள‌ராது ந‌டைப‌யின்று வ‌ருகிறார்.

No comments:

Post a Comment