Wednesday, December 30, 2009


கர்ணன்

மதுரையில் பிற‌ந்த இவர் தையற்கலைஞ‌ராக பணியாற்றிக் கொண்டே முன்னூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், தொடர் கதைகள், குறுநாவல்கள், கவிதைகள், கட்டுரைகள், சுதந்திரப் போராட்ட வரலாறுகள் என தமிழின் பல்வேறு எழுத்து வடிவங்களிலும் தன்னுடைய பங்களிப்பை ஈந்தளித்துள்ளார். இளம் வயதிலேயே இளம்பிள்ளைவாத பாதிப்பால் கால் செயலிழந்தாலும் தனது எழுத்தின் வழியாக‌ பெற்ற மதிப்பு மிகுதி. "ஊனமுற்றோரின் உயரிய சாதனைகள்" நூலில் இடம் பெற்ற சாதனையாளர்.

"கனவுப் பறவை", "கல்மனம்", "மறுபடியும் விடியும்", "முகமற்ற ம‌னிதர்கள்", "அவர்கள் எங்கே போனார்கள்" போன்றவை உட்பட முப்பதிற்கும் மேற்பட்ட சிறந்த புத்தகங்களை எழுதியவர். இவரின் பல நூல்கள் கல்லூரிகளிலும், பல்கலைக்கழகங்களிலும் பாடத்திட்டமாக வைக்கப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன என்பது கூடுதல் செய்தி.

No comments:

Post a Comment