ஜெனிதா
கறுப்பும் வெள்ளையும் சரிவிகிதத்தில் கலந்திருக்கிற சதுரங்க களத்தில், வெற்றிக்கோப்பைகளைத் தட்டிப்பறிக்க தவழ்ந்தே செல்ல நேர்ந்தாலும் கூட உடற்குறை ஒரு பொருட்டே அல்ல என்கிற உண்மையை தன்னுடைய வாழ்க்கையின் மூலமாக உணர்த்தியபடி வலம்வருகிறார் செல்வி.ஜெனிதா.
தந்தை காணிக்கை இருதயராஜின் கனவுகளை நனவாக்கும் முனைப்போடு, சதுரங்க விளையாட்டில் சர்வதேச அளவில் முத்திரை பதித்து வருகிறார். மனதுக்குள் நம்பிக்கை பூ பூத்தால் போர்களங்களும் கூட புன்னகை தேசங்கள் தான் என்றுரைப்பது போல மாறாத புன்னகை இவரின் முகத்தில் குடிகொண்டிருக்கிறது.
சர்வதேச அளவில் சதுரங்க உலகில் வழங்கப்படும் உயரிய WIM (World International Master) விருது பெற்ற இந்தியாவின்ன் ஒரே உடல் ஊனமுற்ற வீராங்கனை, 2008.இல் ஜெர்மனில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்ற ஊனமுற்ற ஒரே இந்திய வீராங்கனை என்பன போன்ற உயரிய தகுதிகளை பெற்றுள்ள இவரின் வாழ்க்கை நம்பிக்கையின் வலிமையை சொல்லித் தருகிறது.
பத்துவயதில் விளையாடத்துவங்கி, குறுகிய காலத்தில் இவர் அடைந்துள்ள வளர்ச்சி பிரமிப்புக்குரியது. உடல் ஊனமுற்ற விளையாட்டு வீரர்கள் மட்டும் பங்கேற்கும்படியான சதுரங்கப் போட்டிகள் இந்தியாவிலும் நடத்தப்படவேண்டுமென்பது திருச்சியில் வாழும் இவரின் எதிர்க்காலக்கனவு.
All the best dear Jeni !
ReplyDeleteVanathi