Wednesday, December 30, 2009


இராமானந்த குரு

குழந்தைப் பிராயத்திலேயே இளம்பிள்ளை வாதத்தால் கடுமையாக பாதிக்கப்ப‌ட்டதால், ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு குழந்தைபோல தூக்கிச் செல்ல வேண்டிய நிலையில் வாழ்பவர். எனினும், அருமைச் சீடர்களின் துணையோடு, இவரது சமூகத் தொண்டுகள் நீளுகின்றன. "உள்ளங்கையில் சிகரம்", "இறப்பிற்கும் பிறப்பிற்கும் நடுவில்", "யார் ஞானி?" எனும் மூன்று புத்தகங்களை எழுதியுள்ளதோடு மட்டுமல்லாமல், ஆன்மீகச் சொற்பொழிவுகள், கேள்வி‍‍ பதில்கள், தொலைக்காட்சி பங்கேற்புகள் என தமிழகம் முழுவதும் அறியப்பட்ட ஆன்மீக அறிவொளியாகத் திகழ்கிறார்.

இவரின் செயல்பாடுகளைப் பாராட்டி 'பாரதி பணிச் செல்வர்' விருது, சாதனையாளர் விருது, 'சமுக சேவா ரத்னா' விருது போன்றவை வழ‌ங்கப்பட்டுள்ளன. இவரின் வாழ்க்கை வரலாறு 'ஊனமுற்றோரின் உயரிய சாதனைகள்' நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது

No comments:

Post a Comment