இரா.செல்வராஜ்
தேனி மாவட்டத்தைச் சேர்ந்த இவர் தன்னுடைய பத்தொன்பதாம் வயதில் உயரத்திலிருந்து தலைச்சுமையோடு தவறிக்கீழே விழுந்ததால், முதுகில் தண்டுவடத்தில் பாதிப்பேற்பட்டு உடற்குறையடைந்தார்.
இந்த விபத்தினால் மார்புக்குக் கீழே செயலிழந்து, சக்கர நாற்காலி வாழ்க்கைக்குத் தள்ளப்பட்டார். எனினும், தணியாத ஆர்வத்தோடு 'கவிச்சிதறல்' தொகுப்பிலும் பங்கெடுத்து தன்னுடைய கவித்திறனை உலகறியச் செய்ய முனைந்துள்ளார்.
No comments:
Post a Comment