Tuesday, December 29, 2009


ஆ.இராஜேந்திரன்

திருச்சி வானொலியின் வளரும் கவிஞ‌ர் பகுதி, காஞ்சி கவிஞர் மன்றம், காரைக்குடி கண்ணதாசன் கவிமன்றம் போன்றவற்றில் பங்கேற்று தன் கவித்திற‌னை உலகினுக்கு உணர்த்திய இவர், பேருந்து விபத்தொன்றில் முதுகெலும்பு வளைந்து பாதிப்படைந்தார்.

சுதந்திரப் பொன்விழா ஆண்டில் அமிர்த ஜோதி அமைப்பு நடத்திய மாநிலம் தழுவிய கட்டுரைப் போட்டியில் 'இனிவரும் இந்தியா' எனும் தலைப்பில் கட்டுரை எழுதி, பாரதிதாசன் பல்கலைக்கழக் துணைவேந்தரின் கரங்களால், கேடயப்பரிசு பெற்றவர் என்பதே இவரின் எழுத்து வன்மையை அடையாளிக்க வல்லதாக திகழ்கிறது. பொதுந‌ல நோக்கில் சமூகப் பங்களிப்புகளும் மேற்கொண்டு வருகிறார்.

No comments:

Post a Comment