Tuesday, December 29, 2009


வேம்பை தி.பாலாஜி

தனது சொந்த ஊரான வேம்படிதாளம் பகுதியை பெயரோடு இணைத்து புனைப்பெயராகக் கொண்டபடி, வாசக எழுத்தாளராய் தன் எழுத்துலகப் பயணத்தை துவங்கி, தொடர்ந்து வார இதழ்கள், சிற்றிதழ்கள் போன்றவற்றில் புதுக்கவிதைகள், ஐக்கூ கவிதைகள், சிறுகதைகள் படைத்தளித்து முத்திரையை பதித்துவருகிறார்.

மும்பை தமிழ்ச்சங்கம் தொகுத்தளித்த 'அணிவகுப்பு', கவிஞ‌ர் சித்தை.பா.பார்த்திபன் தொகுத்த 'கலைஞ‌ர் கவிநானூறு', 'கவிச்சோலை' போன்ற பல நூல்களில் கவிதை யாத்ததன் மூலம் தன்னுடைய சிந்தனையாற்றலை அடையாளித்து இலக்கிய உலகில் வலம் வருகிறார். மேலும், 'அனைத்துலக தமிழ் மாம்ன்றம்' அமைப்பின் சேலம் மாவட்ட அமைப்பாளராக‌வும் செயலாற்றி வருகிறார்.

No comments:

Post a Comment